கடற்சீற்றத்தால் முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் திடீரென அதிகரித்த கடற்சீற்றம் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின் வாடிகளுக்குள் இன்று (11) காலை புகுந்ததால், அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடல்நீர் உட்புகுந்ததன் காரணமாக மீனவர்களின் வாடிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நேரில் சந்தித்தார் .
கடற்சீற்றத்தால் முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
Reviewed by Vijithan
on
August 11, 2026
Rating:
Reviewed by Vijithan
on
August 11, 2026
Rating:


No comments:
Post a Comment