அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னாரில் மீட்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

 தலைமன்னார் கடற்பரப்பில் மணல்திட்டொன்றில் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கடற்படையினரால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று (05) பிற்பகல் அங்கிருந்த மேலும் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மீட்கப்பட்டவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரு பிள்ளைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து கடல் வழியாக வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இதன்படி, ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 11 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் மேலதிக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைளுக்காக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.












தலைமன்னாரில் மீட்கப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு Reviewed by Vijithan on September 05, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.