அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு : பொலிஸார் விசாரணை தீவிரம்

வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (28.10.2017பிற்பகல் 250க்கு மேற்பட்ட வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா மருதநிலம் கல்நாட்டினகுளம் பகுதியிலுள்ள பூங்காவில் வேலை செய்ய சென்ற நபர் ஒருவர் நிலத்தினை கொத்திய சமயத்தில் துப்பாக்கி ரவைகள் இருப்பதனை அவதானித்த பின் சிதம்பரபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரபுரம் பொலிசார் மற்றும் வவுனியா பொலிசார் 250க்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகளை மீட்டேடுத்தனர். மீட்கப்பட்ட ரவைகள் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக இருக்கும் என பொலிஸார் சந்தேச வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
 (சசி வவுனியா




வவுனியாவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு : பொலிஸார் விசாரணை தீவிரம் Reviewed by NEWMANNAR on October 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.