அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா, பேரூந்து நிலையத்தில் 4 கிலோ 96 கிராம் கேரளா கஞ்சாவுடன் மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வவுனியா வவுனியா போதை பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் இன்று (30) காலை 11..00 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் பேரூந்தில் பயணித்த இளைஞன் ஒருவரின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த வவுனியா போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுப் பொலிசார் வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து குறித்த இளைஞனின் பையினை சோதனை செய்த போது அதில் 4 கிலோ 96 கிராம் கேரளா கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


வவுனியா பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது Reviewed by Author on October 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.