அண்மைய செய்திகள்

recent
-

விதவையாய் அந்தப்பூனையின்…?!?


விதவையாய் அந்தப்பூனையின்…?!?

விடியற்காலையில்
விழித்திரையில்
விழுந்த காட்சி
விம்மியது மனட்சாட்சி....

விளையாட்டாக நானும்
வீசிய கல்லும்
விழுந்த சத்தத்திலும்
வீறிட்டு ஓடவில்லை-அந்த பூனை…!

வீதியில்
விதியில்
விழியில் கசிந்த
விரல் துடைத்த துளிகள் சுட்டது…

விதியின் சதியா…இல்லை.....
விந்தை மனிதரின்
விவேகமற்ற வேகத்தினால்
விளைந்த விபத்துதான்-அது

வீதியில் யானையைக்கண்டால்
விழுந்தடித்து ஓடும் மனித கூட்டமே-அதே
வீதியில் பூனையைக்கண்டால்
விரட்டியடித்து-உயிர் பறிப்பீர்களா…

விளங்கவில்லை.......மனிதம்
விழியில் மீண்டும் கண்ணீர்
விழிகளை மூடி அந்த பூனையை
வீதியின் ஒதுக்குப்புறத்தில் வைக்கின்றேன்-ஏற்கனவே
வீசப்பட்டுகிடக்கின்றது-நாயும் கழுதையும்
விலங்காய் என்னை-பல
விலங்குகள் பார்த்து செல்கின்றது-அதே
வீதியில்……
விதவையாய் அந்தப்பூனையின்…?!?

கவிஞர் வை.கஜேந்திரன்




விதவையாய் அந்தப்பூனையின்…?!? Reviewed by Author on August 28, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.