விதவையாய் அந்தப்பூனையின்…?!?
விதவையாய் அந்தப்பூனையின்…?!?
விடியற்காலையில்
விழித்திரையில்
விழுந்த காட்சி
விம்மியது மனட்சாட்சி....
விளையாட்டாக நானும்
வீசிய கல்லும்
விழுந்த சத்தத்திலும்
வீறிட்டு ஓடவில்லை-அந்த பூனை…!
வீதியில்
விதியில்
விழியில் கசிந்த
விரல் துடைத்த துளிகள் சுட்டது…
விதியின் சதியா…இல்லை.....
விந்தை மனிதரின்
விவேகமற்ற வேகத்தினால்
விளைந்த விபத்துதான்-அது
வீதியில் யானையைக்கண்டால்
விழுந்தடித்து ஓடும் மனித கூட்டமே-அதே
வீதியில் பூனையைக்கண்டால்
விரட்டியடித்து-உயிர் பறிப்பீர்களா…
விளங்கவில்லை.......மனிதம்
விழியில் மீண்டும் கண்ணீர்
விழிகளை மூடி அந்த பூனையை
வீதியின் ஒதுக்குப்புறத்தில் வைக்கின்றேன்-ஏற்கனவே
வீசப்பட்டுகிடக்கின்றது-நாயும் கழுதையும்
விலங்காய் என்னை-பல
விலங்குகள் பார்த்து செல்கின்றது-அதே
வீதியில்……
விதவையாய் அந்தப்பூனையின்…?!?
கவிஞர் வை.கஜேந்திரன்
விதவையாய் அந்தப்பூனையின்…?!?
Reviewed by Author
on
August 28, 2018
Rating:
No comments:
Post a Comment