நடிகை எல்லாம் அல்ல, சாய் பல்லவியின் எதிர்கால கனவு என்ன தெரியுமா..
ப்ரேமம் என்ற ஒற்றை மலையாள படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பிறகு தியா என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்த இவர், தனுசுடன் மாரி-2 படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது சூர்யாவுடன் என்ஜிகே, மலையாளத்தில் பகத்பாசிலுடன் அதிரன் படங்களில் நடித்து வருகிறார். அடுத்தப்படியாக ஒரு கன்னட படத்தில் நடிக்கிறார்.
இந்தநிலையில், சாய் பல்லவி அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகையாக வேண்டும் என்ற எனது கனவு நனவாகி விட்டது. ஆனால் இனிமேல் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த வகையில், என்னை ஒரு முழுமையான நடிகையாக வெளிப்படுத்த வேண்டும். அதன் பிறகு எனது டாக்டர் பணியை தொடருவதே எனது எதிர்கால ஆசையாக உள்ளது என்கிறார்.
நடிகை எல்லாம் அல்ல, சாய் பல்லவியின் எதிர்கால கனவு என்ன தெரியுமா..
Reviewed by Author
on
April 23, 2019
Rating:
No comments:
Post a Comment