அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான க.குமணன் தாக்கப்பட்டிருக்கிறார்...27.05.2019

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இன்றைய தினம் உத்தரவிட்டிருந்தது

இந்நிலையில் இன்றைய தினம் இந்த கேமராக்களை உடனடியாக அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் அவர்கள் கொக்கிளாய் போலீஸ் நிலைய போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்

ஊடகவியலாளர் கமராவையும் சேதப்படுத்தி அவரை தீய வார்த்தைகளால் எச்சரித்ததாகவும் ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான க.குமணன் தாக்கப்பட்டிருக்கிறார்...27.05.2019 Reviewed by Author on May 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.