அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் விபத்து -ஒருவர் பலி-மேலும் ஒருவர் படுகாயம்-(படம்)

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று வியாழக்கிழமை 06-06-2019 மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இன்றைய தினம் வியாழக்கிழமை(6) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் எ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

மன்னாரில் இருந்து தலைமன்னார் வீதியூடாக குறித்த இளைஞரும், பிரிதொரு நபரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில்  நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

குறித்த பட்டா ரக வாகனம் சரியான பாதையூடாக மன்னார் நோக்கி பயணித்த போது,   குறித்த பாதையூடாக நேர் எதிரே குறித்த மோட்டார் சைக்கிள் பயணித்த போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிலை ஓட்டிச் சென்ற பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, பின்னால் அமர்ந்து சென்ற காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்குட்டி விக்கி (வயது-32) என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, படுகாயமடைந்த  குறித்த மன்னார் பொது வைத்தியசாலையின் நபர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பட்டா ரக வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மது போதையில் காணப்பட்டதாக தெரிய வருகின்றது. மேலதிக விசாரனைகளை மன்னார் பொது வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் விபத்து -ஒருவர் பலி-மேலும் ஒருவர் படுகாயம்-(படம்) Reviewed by Author on June 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.