அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'பார்வளன் நாடக சரிதம்' என்ற நூல் வெளியீட்டு விழா

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் சுண்டிக்குழிப் புலவர்
வி.கபிரிகேல் மொத்தம் போல் அவர்களின் கவித்துவ மரபில் வந்த புலவர்
செபமாலை மொத்தம் போல் அவர்களின் 'பார்வளன் நாடக சரிதம்' என்ற நூல்
வெளியீட்டு விழா மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் தமிழ் நேசன்
அடிகளாரின் தலைமையில் நடைபெறுகின்றது.

மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை
(09.11.2019) காலை 9.30 மணிக்கு நடைபெற இருக்கும் இவ் விழாவுக்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் ஆகியோருடன்

சிறப்பு மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர், மன்னார் நகர சபை தலைவர், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் எழுத்தாளர்கள் என பலரும் இதில் கலந்து கொள்ளுகின்றனர்.

மன்னாரில் 'பார்வளன் நாடக சரிதம்' என்ற நூல் வெளியீட்டு விழா Reviewed by Author on November 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.