அண்மைய செய்திகள்

recent
-

முறிகண்டியில் விபத்து 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி -


முல்லைதீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிகண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
ஏ9 வீதியில் வேகமாக பயணித்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்து சம்பவம் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாந்தபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சுப்பையா தர்ஷன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முறிகண்டியில் விபத்து 20 வயது இளைஞன் ஸ்தலத்திலேயே பலி - Reviewed by Author on January 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.