அண்மைய செய்திகள்

recent
-

தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது....

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகார வழக்கில் மேலும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை சிபிசிஐடியினர் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளத்தில் பொலிஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்த சி.பி.சி.ஐ.டி. 5 பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்ததுள்ளனர்.

தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில், சாத்தான்குளத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் குறித்த 5 காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது.... Reviewed by Author on July 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.