அண்மைய செய்திகள்

recent
-

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர். 

 சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு Reviewed by Author on March 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.