அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொங்கல் தினத்தையொட்டி தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.

மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கில் கடந்த சில வருடங்களாக மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வரும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான (மெசிடோ) நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (18) பொங்கல் நிகழ்வும்,தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஒரு தொகுதி பயணாளிகளுக்கான உலர் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றது. 

 மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2022 ஆம் வருடத்திற்கான பொங்கல் விழா குறித்த நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாக்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்றது. இதன் போது குறித்த நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது மன்னாரில் வறுமைக் கோட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








மன்னாரில் பொங்கல் தினத்தையொட்டி தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on January 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.