“தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்குக் கிஞ்சித்தும் இடமளிக்க வேண்டாம் உறவுகளே!”
சிங்கள தேசத்தின் #பொருளாதார #மோதலில் தமிழ்த் தேசம் சிக்குப்படாது #அமைதியாக இருப்பதே உசிதமானது...
தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவளித்த மக்களில் ஒருசாராருக்குத் #திருந்துவதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்கி, அவர்களையும் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்துருவாக்கத்தையும் முன்னெடுப்பதே தமிழினத்தின் தேச விடுதலைக்கு வழிவகுக்கும் - வலுச்சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்...
கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கு ஊறுவிளைவித்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு முன்னெடுத்த #அங்கஜன் இராமநாதன், #டக்ளஸ் தேவானந்தா, #கருணா, #பிள்ளையான், #வியாழேந்திரன் மற்றும் #போலித் #தமிழ்த் #தேசியவாதிகள் போன்றோரை எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகத் தோற்கடித்துத் தமிழ்த் தேச விடுதலைக்கு வலுச்சேர்க்க அனைவரும் சபதமெடுப்போம்!
அரசியல் தீர்வற்ற அபிவிருத்தியென்பது வெறும் #மாயை என்பதை உணர்ந்து #விடுதலை நோக்கிய பாதையில் விசுவாசமாகப் பயணிப்போமாக!
க.சுகாஷ்,
ஊடகப் பேச்சாளர்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
“தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்குக் கிஞ்சித்தும் இடமளிக்க வேண்டாம் உறவுகளே!”
Reviewed by Author
on
May 11, 2022
Rating:
No comments:
Post a Comment