அண்மைய செய்திகள்

recent
-

“தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்குக் கிஞ்சித்தும் இடமளிக்க வேண்டாம் உறவுகளே!”

நாட்டின் இந்த நிலமைக்கும் தமிழ்த் தேசத்தின் அவலத்திற்கும் #அங்கஜன் இராமநாதன், #டக்ளஸ் தேவானந்தா, #கருணா, #பிள்ளையான், #வியாழேந்திரன் மற்றும் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்குள் மறைந்திருந்து அரச நிகழ்ச்சி நிரலைக் கனகச்சிதமாக #நகர்த்துபவர்களும் காரணமென்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை... அதற்காகத் தமிழர் தாயகத்தில் அவர்களைத் தாக்குவதையோ அல்லது அவர்களது அலுவலகங்களுக்குத் தீ வைப்பதையோ ஜனநாயக அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாது... இவர்களுக்கான சரியான தண்டனை அடுத்த பொதுத் தேர்தலில் இவர்களுக்கு #வாக்களிக்காது முற்றாகப் புறக்கணித்து இவர்களை #அரசியல் #அநாதைகளாக்குவதே! 

சிங்கள தேசத்தின் #பொருளாதார #மோதலில் தமிழ்த் தேசம் சிக்குப்படாது #அமைதியாக இருப்பதே உசிதமானது... தமிழர் தாயகத்திலிருந்து சிங்களக் கட்சிகளுக்கு ஆதரவளித்த மக்களில் ஒருசாராருக்குத் #திருந்துவதற்கு சந்தர்ப்பமொன்றை வழங்கி, அவர்களையும் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் கருத்துருவாக்கத்தையும் முன்னெடுப்பதே தமிழினத்தின் தேச விடுதலைக்கு வழிவகுக்கும் - வலுச்சேர்க்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்... கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கு ஊறுவிளைவித்து சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் திட்டமிட்டு முன்னெடுத்த #அங்கஜன் இராமநாதன், #டக்ளஸ் தேவானந்தா, #கருணா, #பிள்ளையான், #வியாழேந்திரன் மற்றும் #போலித் #தமிழ்த் #தேசியவாதிகள் போன்றோரை எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகத் தோற்கடித்துத் தமிழ்த் தேச விடுதலைக்கு வலுச்சேர்க்க அனைவரும் சபதமெடுப்போம்! அரசியல் தீர்வற்ற அபிவிருத்தியென்பது வெறும் #மாயை என்பதை உணர்ந்து #விடுதலை நோக்கிய பாதையில் விசுவாசமாகப் பயணிப்போமாக!

 க.சுகாஷ், 
ஊடகப் பேச்சாளர், 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.




“தமிழர் தாயகத்தில் வன்முறைகளுக்குக் கிஞ்சித்தும் இடமளிக்க வேண்டாம் உறவுகளே!” Reviewed by Author on May 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.