அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். அவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் மற்றொருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இரண்டு துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கடந்த வாரம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அமெரிக்க மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி Reviewed by Author on June 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.