அண்மைய செய்திகள்

recent
-

அன்னைபூபதி அவர்கள் அறவழிப் போராட்டம் ஆரம்பித்து இன்று 35,வது ஆண்டு நினைவு நாள்

இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அவையாவன: 1. உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். 2. விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அன்னைபூபதி தன் போராட்டத்தை 1988, மார்ச் 19 ல்,தொடங்கினார். 

முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார். அன்னை பூபதியின் நினைவுநாள் நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது.

  -பா.அரியநேத்திரன்-


அன்னைபூபதி அவர்கள் அறவழிப் போராட்டம் ஆரம்பித்து இன்று 35,வது ஆண்டு நினைவு நாள் Reviewed by Author on March 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.