மன்னாரில் டெங்கு ஒழிப்பு திட்டம்

மன்னார் மாவட்டத்தில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் இன்று மன்னார் பொலிஸ் நிலையத்தினால் விசேட சிரமதான பணி இடம்பெற்றது.மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொடிதுவக்கு அவர்களின் தலைமையில் மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொலிஸார் இணைந்து மேற்படி சிரமதான பணியினை மேற்கொண்டனர்.மன்னாரில் உள்ள சகல கிராமங்களிலும் பொலிஸார் மேற்படி சிரமதான பணிகளை மேற்கொண்டனர். மக்களுக்கு விளிப்பூட்டும் வகையில் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தலை வழங்கி வருகின்றனர்.
மன்னாரில் டெங்கு ஒழிப்பு திட்டம்
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:

No comments:
Post a Comment