மன்னாரில் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க இந்திய கப்பல் வருகிறது!
வடமாகாணத்திலுள்ள மன்னார் கடற்படுக்கையில் காணப்படும் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க இந்திய நாட்டில் கப்பல்கள் அடுத்தமாதம் இலங்கை வரவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். மன்னார் கடற்படுக்கையை இந்திய தனியார் நிறுவனத்திடம் இலங்கை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் 100வீத ஆர்வத்துடன் அங்கு செயலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்நிறுவனம் தந்த தகவல்களின்படி 8வருடங்கள் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளது முதல் மூன்று வருடங்களில் 3எண்ணெய்க்கிணறுகள் தோண்டப்படவுள்ளன என்றும் முப்பரிமாணத்தின் 1450 சதுரகிலோமீற்றர் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுளய்ளது இத்திட்டம் குறித்து முழுமையான விபரங்களை அரசிடம் அமைச்சர் கையளித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் எண்ணெய் வளங்களை கண்டுபிடிக்க இந்திய கப்பல் வருகிறது!
Reviewed by NEWMANNAR
on
September 20, 2009
Rating:
No comments:
Post a Comment