அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தடை செய்யப்பட்ட உபகரணக்களை கொண்டு மீன்பிடிக்க தடை _


மன்னார் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பைத்து மீன் பிடித் தொழிலில் ஈடுப்படுவதற்கு வழங்கப்பட கால அவகாசம் இன்று முடிவடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் சந்திரசேகரப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வலை,இழுவை வலை, போன்ற வலைகளும் கடற்பகுதியில் பற்றைவைத்து மீன்பிடித்தல் போன்ற முறையும் தடைசெய்யப்பட்டிருந்தது.எனினும் மேற்படி கடற்தொழில் உபகரணங்களை வைத்தே மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

வர்தமானி அறிவித்தலின் பிரகாரம் மேற்படி உபகரணங்களை கையாண்டு மீன் பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள மீபவர் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக மாணவர்களுக்கு தெரியப்படுத்த இருந்ததாகவும் கடற்தொழில் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

மேற்படி தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை மன்னர் கடற்தொழில் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அதற்கான கால அவகாசம் செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3 ஆம் திகதி வரை வழங்கப்பட்டதாகவும் மாற்று பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது வரை தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்கள் எவையும் ஒப்படைக்கவில்லை எனுனும் இன்று 3 ஆம் திகதி முதல் தடைசெய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை வைத்து கட்ற்தொழிலில் ஈடுபப்டும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களை கைது செய்வதற்கு முப்படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தடை செய்யப்பட்ட உபகரணக்களை கொண்டு மீன்பிடிக்க தடை _ Reviewed by NEWMANNAR on December 26, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.