அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் பாரிய நீர்த்தாங்கி திறந்து வைப்பு _

27/05/2010
ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் நெக்கொட் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 29.6 மில்லியன் நிதி உதவியுடன் நீர்த்தாங்கி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ , வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ , வட மாகாண அரசாங்க அதிபர், மற்றும் நெக்கொட் திட்ட பணிப்பாளர் த.லங்காநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந் நீர்த்தாங்கி மூலம் மன்னார் மாவட்டத்தில் சுமார் 1500 குடும்பங்களை சேர்ந்தோர் பயன்பெறுவர் என நெக்கொட் திட்ட பணிப்பாளர் த.லங்காநேசன் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1620 மில்லியன் ரூபாய் செலவில் 199 வேலைத்திட்டங்கள் நெக்கொட் வேலைத்திட்டத்தின் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை இன்றைய தினம் 88 மில்லியன் ரூபாய் செலவில் மன்னார் வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிலையம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் பாரிய நீர்த்தாங்கி திறந்து வைப்பு _ Reviewed by NEWMANNAR on December 02, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.