எமது மண்ணை மீட்டெடுக்கவும் அரசியல் வாழ்வொண்றுக்குள் சுபீட்சமாக வாழவும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வழிவகுக்க வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
கடந்த மூன்று தசாப்தகால யுத்தப் பேரழிவுகளின் கொடுரங்களால் அவதியுற்ற எமது மக்களின் வாழ்வில் சுபீட்சமான எதிர்காலமும்இநிரந்தரமான அரசியல் தீர்வும் எட்டப்பட இயேசுக்கிறிஸ்துவின் இன்றைய நன்நாள் வழிவகுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின்(டெலொ)தலைவரும்இதமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த மூன்று தசாப்த கால யுத்தப் பேரழிவுகளாலும் பேரினவாத அடக்கு முறைகளாலும் எமது மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகள்இதுயரம் நிறைந்த வரலாற்று அத்தியாயங்கள் முழுமையாக முடிவுக்கு கொண்டுவரப்பட கிறிஸ்துவின் பிறப்பு வழி வகுக்க வேண்டும்.
வன்னியில் இடம்பெற்ற இருதி யுத்தத்தின் பேரழிவுகளை எதிர்கொண்ட எமது மக்களின் பெரும்பாலானோர் இன்னமும் அந்த முகாம்களிலும்இதடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொடுரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இயேசு பிறந்த இன்றைய புனித நன்னாளில் நாம் அணைவரும் ஒன்று பட்டு பிரார்த்திப்போம்.
அதே போன்று பல வருடங்களாக எந்த வொரு விசாரணைகளுமின்றி தடுப்பு முகாம்களிலும்இசிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தவும் இரட்சிப்பின் மீட்பரான இயேசுக்கிறிஸ்துவின் இன்றைய புனித நன்னால் வழிவகுக்க வேண்டும். இரத்தக்கறை படிந்த கடந்தகால கொடுர வாழ்விலிருந்து எமது மண்ணை மீட்டெடுக்கவும் சுதந்திரமான அரசியல் வாழ்வொன்றுக்குள் சுபிட்சமாக வாழவும் இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பு வழிவகுக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
(மன்னார் நிருபர்-SRL
எமது மண்ணை மீட்டெடுக்கவும் அரசியல் வாழ்வொண்றுக்குள் சுபீட்சமாக வாழவும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வழிவகுக்க வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
December 24, 2010
Rating:
No comments:
Post a Comment