அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு.-(மன்னார் நிருபர்

வடக்கு,கிழக்கு மாகணங்களில் இளைஞர்,யுவதிகளை இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்களை சேர்த்துக்கொள்ளும் முகமாக மன்னார் நகர் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களிலும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல்களை வழங்கி வருகின்றனர்.



பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியவின் விசேட பணிப்பின் பேரில் மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.செல்வராஜா மன்னார் மாவட்டத்திற்கு வந்து ஒவ்வெரு பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று நடவடிக்கைகளினை மேற்கொண்டு வருகின்றார்.


இதற்கமைவாக வடக்கு கிழக்கு பகுதிகளில் 50ஆண்களும், 25பெண்களும் உதவிப்பொலிஸ் பரிசோதகர்களாக   தெரிவு செய்யப்படவுள்ளனர்.


பொலிஸ் காண்ஸ்டபிள்களாக 350 ஆண்களும்    50 பெண்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதேவேளை 25 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் சாராதிகளும் நியமிக்கப்படவுள்ளனர் என்று இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பயிற்சிக்கல்லூரி பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.செல்வராஜா தெரிவித்தார்.


இதற்காண விண்ணப்பப்படிவங்களை பொலிஸ் நிலையத்திலும்,அரச அதிபர் காரியாலயத்திலும் பெற்றுக்கொள்வதற்காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2010.12.24 அம் திகதி வர்த்தமானி இலக்கம் 1686 1 ஐ பார்க்கும்படியும் விண்ணப்பங்கள் பாரம் எடுக்கும் கடைசித்திகதி 25.02.2011 ஆகும்.


விண்ணப்பங்கள் அணுப்பவேண்டிய முகவரி பணிப்பாளர் பொலிஸ் ஆட்சேர்ப்பு காரியாலயம்,இலக்கம் 375 கெவ்லொக் றோட் கொழும்பு.06 எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



            (மன்னார் நிருபர் லெம்பேட்)

மன்னாரில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு.-(மன்னார் நிருபர் Reviewed by NEWMANNAR on January 31, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.