மண்ணுக்காக தமது பிள்ளைகளை தந்த பெற்றோர்கள் பிள்ளைகளுடைய ஆத்ம சாந்திக் கிரியை கூட செய்ய முடியாத ஒரு நிலையே இலங்கையில் நிலவுகிறது - சிவசக்தி ஆனந்தன்
மக்களுடைய மகிழ்ச்சியான வாழ்வுக்காக உயிர் நீத்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருகின்ற இந்தமாதத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தமண்ணுக்காகவும் எங்களுக்காகவும் உயிர் விட்டுள்ளார்கள் என்பதை நாம் நினைவு கூறவேண்டுமென்கிறார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன்
எங்களுடைய மண்ணில் உயிர்நீத்த போரளிகளையோ அல்லது பொதுமக்களையோ நினைவு கூரவேண்டிய இந்தக் காலகட்டத்தில் எதுவுமே செய்ய முடியாமல் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடைய பிரிவுகளை தங்களுடைய மனத்துக்குள்ளே வைத்து அழவும் முடியாமல் அவர்களுக்கு ஆத்ம சாந்திக் கிரியை கூட செய்ய முடியாத ஒரு துக்கமான நிலையில் இருக்கிறார்கள் என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று வெளி நாடுகளுக்கு பிரசாரம் செய்கிற இந்தநேரத்தில் ஆலயங்களில் கூட பூஜை செயற்பாடுகளைச்செய்வதற்கோ பொது நிகழ்வில் கூட கலந்துகொள்வதற்கு கூட அச்சுறுத்தலான பதட்டமான நிலவரத்தை இன்று இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
போராளிகளின் சமாதிகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தமிழ் மக்களுடைய மனங்களில் ஒரு தீராத வடுவாக மாறியிருக்கிறதென சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்ணுக்காக தமது பிள்ளைகளை தந்த பெற்றோர்கள் பிள்ளைகளுடைய ஆத்ம சாந்திக் கிரியை கூட செய்ய முடியாத ஒரு நிலையே இலங்கையில் நிலவுகிறது - சிவசக்தி ஆனந்தன்
Reviewed by Admin
on
November 27, 2011
Rating:

No comments:
Post a Comment