அரச அதிபர்கள் இடமாற்றம் : வன்னி மக்களுக்குக் குழப்பம் _
வன்னி மாவட்ட அரசாங்க அதிபர்களின் திடீர் இடமாற்றங்கள், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்குள் வருவதால் வன்னி மாவட்ட மக்களிடையே பெரும் குழப்பமான நிலை தோன்றியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக் கப்பட்ட பத்திநாதன் தென்னிலங்கையில் உள்ள மொனராகலை மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக தற்போது இருக்கும் நா.வேதநாயகன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த ஹேரத் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளினால் பொது மக்களிடையே பெரும் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
சுமார் முப்பது வருட கால இடைவெளியின் பின், வட பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக நியமிக் கப்பட்ட பத்திநாதன் தென்னிலங்கையில் உள்ள மொனராகலை மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக தற்போது இருக்கும் நா.வேதநாயகன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக இருந்த ஹேரத் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளினால் பொது மக்களிடையே பெரும் குழப்பமான நிலை காணப்படுகின்றது.
சுமார் முப்பது வருட கால இடைவெளியின் பின், வட பகுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
அரச அதிபர்கள் இடமாற்றம் : வன்னி மக்களுக்குக் குழப்பம் _
Reviewed by Admin
on
November 10, 2011
Rating:

No comments:
Post a Comment