நேற்று கைதான 23 இந்திய மீனவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 23 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியளில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன் இன்று உத்தரவிட்டார்.
இலங்கை கடற்படையினராலட நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட மேற்படி மீனவர்கள், தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்ட உத்தரவினைப் பிறப்பித்தார்.
அத்துடன், குறித்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். நீதவானின் உத்தரவை அடுத்து குறித்த மீனவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று கைதான 23 இந்திய மீனவர்களுக்கு 14 நாள் விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment