மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த மன்னார் பொலிஸ் காண்ஸ்டபில் விளக்கமறியலில்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த மன்னார் பொலிஸ் காண்ஸ்டபிலான சிறி காந்தன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-மன்னார் நீதிமன்றம் தாக்குதல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வந்த ஊடகவியலாளர்கலான
ஏ.எஸ்.எம்.பஸ்மி,எஸ்.ஆர்.லெம்போ ட்,ஏ.ரி.மார்க்,என்.ஜெ.பெலிஸ் ரஸ் பச்சக் ஆகிய நான்கு ஊடகவியலாளர்களுக்கும் பல தரப்பிலிருந்தும் நேரடியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேரடியாக கொலை மிரட்டல் விடுத்த
மன்னார் பொலிஸ் காண்ஸ்டபிலான சிறி காந்தன் என்பவர் குறித்து ஊடகவியலாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்திருந்தனர்.
இந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டு நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் 4 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த மன்னார் பொலிஸ் காண்ஸ்டபில் விளக்கமறியலில்.
Reviewed by NEWMANNAR
on
August 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment