அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்-கைது செய்யப்பட்ட 13 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு!

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றத்தில் குறித்த 13 சந்தேக நபர்களும் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.மன்னார் நீமன்றம் தொடர்பான வழக்கு விசாரனைகள் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற போது தென் பகுதி சட்டத்தரணிகள் 11 பேரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
குறித்த 13 சந்தேக நபர்கள் சார்பாகவும் சட்டத்தரணி என்.எம்.சகீத் ஆஜராகி இருந்தார்.குறித்த சட்டத்தரவு குறித்த 13 சந்தேகநபர்களுக்கும் பிணை கோரி நேற்று மனு ஒன்றை நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
எனினும் குறித்த பினை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் குறித்த 13 சந்தேக நபர்களையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்பட்டு வரும் மேலும் 27 பேரையும் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு மேலதிக நீதவான் ஆர்.எஸ்.ஏ.திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்-கைது செய்யப்பட்ட 13 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு! Reviewed by NEWMANNAR on August 14, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.