மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கூறாய் கிராமத்தில் மரக்கறி செய்கை அதிகரிப்பு.- படங்கள் இணைப்பு
யுத்தம் நிறைவடைந்து 5 வருடங்களைக்கடக்கின்ற நிலையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
.
.
இந்த நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற நிலையில் உள்ள கூறாய் எனும் கிராமத்தில் உள்ள மக்கள் தமது வெற்றுக்காணிகளில் மரக்கறி பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூறாய் மற்றும் சீது விநாயகர் புரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் தற்போது சுமார் 70 குடும்பங்கள் வரை மட்டுமே மீள் குடியேறியுள்ளனர்.
-இந்த மக்கள் கடந்த யுத்தத்தின் போது அனைத்தையும் இழந்த நிலையில் இடம் பெயர்ந்து சென்று மீண்டும் குடியமர்ந்துள்ளனர்.இந்த நிலையில் இந்த மக்கள் மரக்கறி பயிர்ச்செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் இந்த மக்கள் உற்பத்தி செய்கின்ற மரக்கறி வகைகள் குறித்த கிராமத்திலும்,அயல் கிராமங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றதே தவிர சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் குறைந்த விலைக்கே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
அதிகளவில் மரக்கறி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்ற போதும் உரிய முறையில் கொள்வனவு இடம் பெறாமையினால் தாம் பாரிய நஸ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும் தற்போது நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மரக்கறி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும் மரக்கறி உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் நிருபர்
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கூறாய் கிராமத்தில் மரக்கறி செய்கை அதிகரிப்பு.- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 02, 2012
Rating:

No comments:
Post a Comment