மடு கல்வி வலயத்தில் 3 ஆம் தவணை முடியும் வரை நிகழ்வுகள் எவையும் இடம் பெற அனுமதி வழங்கப்படமாட்டாது-மடு வலயக்கல்விப்பணிப்பாளர்.
தற்போது பாடசாலைகளில் மூன்றம் தவணை ஆரம்பித்திருப்பதனால் மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இனி எவ்வித நிகழ்வுகளும் நடாத்துவதற்காண அணுமதிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது மூன்றம் தவணை ஆராம்பித்திருப்பதன் காரணத்தினால் காடசாலைகளில் நிகழ்வுகளை நடாத்துகின்றமையினால் மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் பாதீப்படைகின்றது.
இதனால் மாணவர்கள் 3 ஆம் தவணை பரிட்சைக்கு தம்மை ஆயத்தப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.
இது மட்டுமின்றி கா.பொ.த.சாதாரணதரப்பரிட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் மாணவர்கள் தற்போது ஊக்கத்துடன் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மூன்றாம் தவணைக்காலத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு நிகழ்வுகள் ஒரு தடையாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே மடு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் இனி எவ்வித நிகழ்வுகளும் நடாத்துவதற்காண அணுமதிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.குரூஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
மடு கல்வி வலயத்தில் 3 ஆம் தவணை முடியும் வரை நிகழ்வுகள் எவையும் இடம் பெற அனுமதி வழங்கப்படமாட்டாது-மடு வலயக்கல்விப்பணிப்பாளர்.
Reviewed by NEWMANNAR
on
October 22, 2012
Rating:
No comments:
Post a Comment