அண்மைய செய்திகள்

recent
-

தாழ்வுபாட்டில் சுருக்குவலை தொழிலுக்கு தடை - நிர்க்கதி நிலையில் 100 குடும்பங்கள்

மன்னார், தாழ்வுபாடு கடலில் சுருக்குவலைத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு கடற்படை தடைவிதித்துள்ளது. சட்டவிரோத மீன்பிடிமுறை என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மீன்பிடி முறையை கடற்படையினர் தடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாழ்வுபாடு கடற்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல்வளம் அழிக்கப்படுவதாக பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதனை அடுத்து கடந்த புதன்கிழமையில் இருந்து சுருக்குவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என கடற்படையினர் உத்தரவிட்டுள்ளனர். ஏனைய அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுருக்குவலை மீன்பிடி அனுமதி மறுக்கப்பட்டதால் அந்தத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சுருக்குவலை தொழிலாளி ஒருவர்  கருத்துத் தெரிவிக்கையில்,
"எங்களுக்கு வேறு தொழில் முறைகள் தெரியாது, அதனைவிட போதிய உபகரணங்களும் இல்லை. அதனால் நீண்டகாலமாக சுருக்குவலை தொழிலையே செய்து வந்தோம். தற்போது கடற்படையினர் இதற்கான அனுமதியை மறுத்துள்ளனர். இதனால் நாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்'' என்றார்.
தாழ்வுபாட்டில் சுருக்குவலை தொழிலுக்கு தடை - நிர்க்கதி நிலையில் 100 குடும்பங்கள் Reviewed by Admin on November 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.