அண்மைய செய்திகள்

recent
-

மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது


மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் 1C பாடசாலையாக இருந்து 01.01.2013 இல் இருந்து 1AB பாடசாலையாக அதாவது பாடசாலையின் கட்டமைப்பு தரம் 1-13 கணித,விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கியதாக 50வது நிலையிற்கட்டளையின்  படி கல்வி அமைச்சு வடமாகாணத்தினால் அனுமதி வழங்கி பிரகடனப்படுத்தி தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அப்பாடசாலை அதிபர் தெரிவித்தார்.


இப் பாடசாலையானது நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும்.

  •  1901ம் ஆண்டு நானாட்டான் அடைக்கலஅன்னை தேவாலயத்தின் தென்புறத்தில் கிடுகினால் வேயப்பட்டு கத்தோலிக்க குருக்களினால் ஆரம்பிக்கப்பட்டது.
  •  1940 இல் தற்போது பாடசாலை அமைந்திருக்கும் இடத்திற்கு இப் பாடசாலை இடமாற்றப்பட்டது.
  • 1950 இல் தரம் 05 வரை இருந்த இப் பாடசாலை தரம் 08 வரை தரமுயர்த்தப்பட்டது.
  • 1960 இல் க.பொ.த.(சா-த)கொண்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. 
  • 1961 இல் றோமன் கத்தோலிக்க திருச்சபையின் கீழ் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன ;பாடசாலையாக பெயர் பெற்று அரச பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
  •  1972 இல் க.பொ.த. (உ-த) வரை தரமுயர்த்தப்பட்டு கலைத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • 1977இல் க.பொ.த.(உ-த) இல் வர்த்தகத்துறை அறிமுகப்படுத்தப்பட்டது.1972ம் ஆண்டிலிருந்து 1C பாடசாலையாக 2012 வரை இருந்த இப் பாடசாலையானது 
  • 01.01.2013 இல் இருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளை உள்ளடக்கிய 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.



1AB பாடசாலையாக அதிகாரபூர்வமாக 01.01.2013 இல் தரமுயர்த்தப்பட்டாலும் இடைக்கால அனுமதியுடன் 18.05.2012 இல் கணித,விஞ்ஞானபிரிவுகள் ,ஆசிரியர் ,செல்வி. துவாரகா விவேகானந்தன் (விஞ்ஞானப் பட்டதாரி-B.S.c யாழ்பல்கலைக்கழகம்) அவர்களை பெறுப்பாசிரியராகக் கொண்டு 08 மாணவர்கள் இக் கற்கை நெறியை முதற்தடவையாக இப்பாடசாலையின் வரலாற்றில் ஆரம்பித்தார்கள்.

மேற்குறிப்பிட்டவாறு 1901ம் ஆண்டிலிருந்து இன்று வரை இப்பாடசாலை படிப்படியாக அறிவிலும்,ஞானத்திலும்,ஆன்மீகத்திலும்,ஒழுக்கத்திலும்,பண்பிலும்,விளையாட்டிலும்,பௌதீகவளத்திலும் மேலும் பலவிடயங்களிலும் வளர்ச்சியடைந்து வருவதோடு   இப்பாடசாலைடி வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்த றோமன் கத்தோலிக்க ஆயர்கள்,குருக்கள்,துறவிகள்,அர்ப்பணித்து பணியாற்றிய பொதுநிலையினர்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விஅமைச்சு,மாகாணக் கல்வித்திணைக்களம், மன்னார் கல்விவலயம், பெற்றோர்கள், உள்நாட்டிலும்,வெளிநாட்டிலும் வாழும் பழையமாணவர்கள்,நலன்விரும்பிகள்,அபிவிருத்திச்சங்கங்கள் அனைவருக்கும் விசேடநன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

நானாட்டான் நகரத்தின் மத்தியில் பலகிராமத்தவர்களையும்,பலசமயத்தவர்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ந்து வரும் இப் பாடசாலையை வாழ்த்துவதோடு குறிப்பாக இப் பாடசாலை வரலாற்றில் முதற் தடவையாக கணித,விஞ்ஞானதுறைகளில் கற்கும் மாணவ,மாணவியரையும் அவர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியர்களையும் வாழ்த்திநிற்கின்றோம்.

 மேலும் இப் பாடசாலை தரமான பாடசாலையாக தொடர்ந்தும் வளர்வதற்கு எல்லோரினதும் ஒத்துழைப்பையும்,ஆசியையும் நாடிநிற்பதாக அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். 
மன்-நானாட்டான் மகாவித்தியாலயம் 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது Reviewed by NEWMANNAR on March 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.