அண்மைய செய்திகள்

recent
-

மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை!

மும்மொழி தேசிய அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


 முன்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது மும்மொழி அடையாள அட்டை பற்றி ஆலோசிக்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்தார்.

 தேசிய அடையாள அட்டையின் முன் பக்கத்தில் சிங்களமே காணப்படுகின்றது. இதை மாற்றி மும்மொழி அடையாள அட்டையை வழங்குவதே எமது விருப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அடையாள அட்டை வழங்கல் எனது அமைச்சின் கீழ் இல்லை எனினும் எனது அமைச்சு இதில் பங்களிக்கவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.எவ்வாறாயினும் இந்த மாற்றத்தை கொண்டுவர ஒரு வருடமாவது எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மும்மொழிகளில் தேசிய அடையாள அட்டை! Reviewed by NEWMANNAR on April 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.