மன்னார் ஊடகவியலாளர் மீது தக்குதல் முயற்சி!
மன்னார் நகரில் இருந்து பேசாலையில் உள்ள தனது வீட்டை நோக்கி இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி தோட்டவெளி சந்தியில் மறைந்து நின்ற மர்ம நபர்கள் பச்சை நிற முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து தாக்க முற்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்று முச்சக்கர வண்டியில் இருந்தவாறே உடகவியலாளரை தாக்க பல தடவை முயற்சி செய்துள்ளதோடு மோட்டார் சைக்கிலை நிறுத்தவும் முயற்சி செய்துள்ளனர். எனினும் துரித கதியில் செயற்பட்ட ஊடகவியலாளர் புதுக்குடியிருப்பு கிராமப்பகுதிக்கு சென்றுள்ளார்
எனினும் நீண்ட நேரம் தாக்க முயற்சிகளை மேற்கொண்ட போதும் குறித்த சம்பவம் முறியடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த சந்தியில் நின்ற சிலர் ஊடகவியலாளரை பத்திரமாக மீட்டு இரவு 9.30 மணியளவில் அன்னாரின் வீடு அமைந்துள்ள பேசாலை பகுதிக்கு பத்திரமாக அழைத்துச் சென்று விட்டுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மன்னார் ஊடகவியலாளர் மீது தக்குதல் முயற்சி!
Reviewed by Admin
on
April 21, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment