கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு.

-இலங்கை கடற்பரப்பினுள் 5 டோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களை கடந்த 6 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸார் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
-இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இன்று வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்து 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
April 18, 2013
Rating:

No comments:
Post a Comment