இன்புளுயன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவு
குறிப்பாக செயற்திறன் குறைந்தவர்களே இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸ் குறிப்பாக வைரஸ் காய்ச்சலாகவே பரவிச் செல்லும் என அவர் குறிப்பிட்டுள்ளார். காய்ச்சல், இருமல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இந்த வைரஸ் தாக்கத்திற்கு இலக்கானோர் ஏனையோரிடமிருந்து விலகியிருப்பதன் ஊடாக இந்த வைரஸ் பரவுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் ஊடாக 24 மணித்தியாலங்களும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.
இந்த பரிசோதனை நடவடிக்கைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுவதுடன், பரிசோதனைக்காக அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, இன்புளுயன்ஸா A மற்றும் B வைரஸ் தாக்கத்திற்குள்ளான 10 கர்ப்பிணித் தாய்மார்கள், கொழும்பிலுள்ள பிரதான வைத்தியசாலைகள் பலவற்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டா
இன்புளுயன்ஸா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் நாட்டின் பல பகுதிகளிலும் பதிவு
Reviewed by Admin
on
May 05, 2013
Rating:

No comments:
Post a Comment