சமுர்த்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும்
மன்னார் தாராபுரம் அல்-மினா மஹா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற
மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராம அதிகாரி பிரிவில் பணியாற்றவென தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்காக நியமனம் வழங்கும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் மேலும் உரையாற்றுகையில்,,,
சமுர்த்தி திட்டம் வறுமையினை ஒழிக்கும் ஒன்றாகவே அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றது.
அதனது நம்பகத்தன்மையினை மக்கள் மத்தியல் எடுத்துச் செல்வது தான் அதிகாரிகளின் பொறுப்பாகும்.இந்த நியமனத்தை பெற்றுத் தருவதற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுத்த முன்னெடுப்புக்கள் வரலாற்றில் ஒரு பதிவாக நிச்சயமாக இருக்கும்.
அதேபோல் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு விசுவாசமாக அதிகாரிகள் இருப்பதன் மூலம் தான் தாம் இழந்து போன அந்த அபிவிருத்திகளை மீண்டும் இம்மண்ணுக்கு கொண்டு வர முடியும் என்றும் கூறினார்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ற யஹ்யான் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் என்.நவகுசீன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள் சமுர்த்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் பந்துல உட்பட பலரும் கலந்து கொண்டணர்.
சமுர்த்தி அதிகாரிகளின் சேவைகள் பணத்துக்காக அல்லாமல் மனித நேயத்துக்காக இருக்க வேண்டும்
Reviewed by Admin
on
June 03, 2013
Rating:

No comments:
Post a Comment