வடமாகாணத்திலும் சமுர்த்தி வறுமை ஒழிப்புத்திட்டம் ஆரம்பம்
இதனைச் செயற்படுத்த ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுக்கும் இரண்டு சமுர்த்தி அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டனர்.பயனாளிகளுக்கு குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப உரியபெறுமதியுடைய உணவுமுத்திரைகளும் வழங்கப்பட்டன.
வடமாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இச்சமுர்த்தித் திட்டம் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது.ஆனால் வடமாகாணத்தில் காணப்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இச்செயற்றிட்டம் இங்கு செயற்படுத்தப்படவில்லை.இதனால் இச்சலுகை இம்மக்களுக்குக் கிடைக்காமலே போய்விட்டது.தற்போது நிலைமைகள் சீரடைந்துள்ளன .
வடக்கிலும் சமுர்த்திச் செயற்திட்டம் அமுல்பபடுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும்,அமைச்சர் டக்லஸ் தேவானந்த அவர்களும் ஜனாதிபதியிடமும்,பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களிடமும் தொடராக வலியுறுத்தி வந்தமையின் பெறுபேறாகவே இத்திட்டம் வடக்கேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
இதன்முதற்கட்டமாக மன்னார்,முல்லைத்தீவு,வவுனியா,கிளநொச்சி,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.இவர்கட்கு 6 நாட்கள் கொண்ட செயலமர்வுகளும் நடாத்தப்பட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த சமுர்த்தி நியமனங்களைப் பெற்றுக் கொண்டோரும்.அவர்களின் குடும்பத்தினரும்,சமுர்த்திப்பயனாளிகளும் அரசுக்கும்,அமைச்சர்களுக்கும் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.
ஆரசினால் இவ்வாறான சமூகநலத்திட்டங்கள்,அபிவிருத்திகள்,நியமனங்கள் வழங்கப்படும் போதும் ,இனம்,மொழி,கட்சிப்பாகுபாடுகள் எதுவும் பார்க்கப்படுவதில்லை.இலங்கைமாதாவின் மக்கள் எனும் வகையிலேயே வழங்கப்படுகின்றன.
இரு தசாப்தங்களுக்குப் பின்னர் எமது இளைஞர்,யுவதிகளுக்கு கிடைத்துள்ள இந்நியமனங்கள் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஊடகங்களில் எதிரான அறிக்கைகளை விட்டு வருகிறது.நீதியமைச்சின் எத்தனை நியமனங்களை வடபுல முஸ்லிம்கட்கு வழங்கி உள்ளீர்கள் பதில் தாருங்கள்...வடக்குத்தேர்தலை மையமாக வைத்துக்கொண்டு வடபுலமுஸ்லிம்களை ஏமாற்றாதீர்கள்.
ஆபத்தில் உதவுபவன்தான் உண்மையான நண்பன் தேர்தல் காலத்தில்மட்டும் வருபவன் சந்தர்ப்பவாதி.
எமது இன்பத்திலும்,துன்பத்திலும் எம்மோடு களத்தில் நின்றுகொண்டு,அரசின் நம்பிக்கைக்குரிய பங்காளி நண்பனாக இருந்துகொண்டு அ.இ.மு.கா பெற்றுத்தரும் நியமனங்களை பிழையாக விமர்சிக்கும் அளவுக்கு காங்கிரஸ் தரம் தாழ்ந்துவிட்தா?.......என நாம் கவலையடைகிறோம்.பாதிக்கப்பட்ட ஒருவனுக்குத்தான் பாதிக்கப்பட்ட இன்னொருவனின் உணர்ச்சிகள் புரியும்.வடபுலமுஸ்லிம்கட்கு முடியுமாயின் நன்மையைச் செய்யுங்கள்.இல்லையாயின் பார்வையாளராக இருந்துவிட்டுப்போங்கள்.
கே.சி.எம்.அஸ்ஹர்
வடமாகாணத்திலும் சமுர்த்தி வறுமை ஒழிப்புத்திட்டம் ஆரம்பம்
Reviewed by Admin
on
June 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment