இந்திய மீனவர்கள் 24 பேரையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 6 இழுவைப்படகுகளின் நேற்று மாலை இலங்கை கடல் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்களை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
-பின்னர் குறித்த 24 மீனவர்களும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.தலைமன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
-விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த 24 மீனவர்களையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்திய மீனவர்கள் 24 பேரையும் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
June 06, 2013
Rating:

No comments:
Post a Comment