13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டம்-விக்னேஸ்வரன்
முதலமைச்சர் பதவியின் இயல்பினை கருத்தில் கொண்டு உள்நாட்டில் வெளிநாட்டிலும் உள்ள தனது நண்பர்கள் பலர் தன்னைக் கேட்டுக்கொண்டதனாலேயே தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் உடன்பாட்டுடன் மட்டுமே முதலமைச்சரால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பங்குதாரர்களிடையே ஏகமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே நான் போட்டியிடுவதற்கு விரும்பினேன் என்றும் அவர் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தமானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இது வலது கையால் கொடுத்து இடது கையால் எடுப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயங்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு பொறுப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 13 ஆவது திருத்தம் பற்றி சரியாக அறியாதவர்களே அதனை விமர்சிக்கின்றனர். ஆளுநரின் உடன்பாடின்றி முதலமைச்சரால் எதுவும் செய்யமுடியாது. என்றும் அவர் தெரிவித்தார்.
13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டம்-விக்னேஸ்வரன்
Reviewed by Admin
on
July 16, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment