மட்டு, செங்கலடி பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் வசிக்கும் உன்னிச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியையான திருமதி. தவசீலன் அனுசியா (34வயது) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பிள்ளையின் தாயான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டின் அறையொன்றில் மின்விசிறி பொருத்துவதற்கான கம்பியில் சீலை துண்டை கட்டி தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது கணவரான தவசீலன் என்பவர் செங்கலடி தபால் நிலையத்தில் பணிபுரிகின்றார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டு, செங்கலடி பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
Reviewed by Admin
on
July 08, 2013
Rating:

No comments:
Post a Comment