இரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது
இவர்கள் தங்களை மீனவர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டுள்ளனர். பைபர் கிளாஸ் வள்ளங்களின் ஊடாக குறித்த இருவரும் இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.
புஸ்பகுமார் மற்றும் வருணகுலசேகர் ஆகிய பெயர்களை உடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது
Reviewed by Admin
on
July 23, 2013
Rating:

No comments:
Post a Comment