ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி: பஸ் சாரதி, நடத்துனர் கைது
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது தாயுடன் சண்டை பிடித்துக்கொண்டு தனியார் பஸ்ஸொன்றில் கொழும்புக்கு பயணித்துள்ளார். இதற்கிடையே நைசாகப் பேசி அந்த யுவதியின் நிலை அறிந்து கொண்ட பஸ் சாரதியும் நடத்துனரும் அவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட யுவதியின் முறைப்பாட்டின் பேரில் விசாரணை நடத்திய பொலிசார் குறித்த சாரதியையும் நடத்துனரையும் கைது செய்திருந்தனர்.
பஸ்ஸின் சாரதியான மலிதுவ பகுதியை சேர்ந்த சிந்தக்க பிரசாத் அபேயதுங்க என்பவரும் அதே பஸ்ஸின் நடத்துனரான கலேவல பகுதியைச் சேர்ந்த துனு ஆராச்சிக்கே சனத்குமார என்பவருமே கைது செய்யப்பட்டிருந்தனர்.
கொழும்பு நீதிமன்ற நீதவான் நிரோசா பெர்னாண்டோ முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட யுவுதி அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியுள்ளார்.
எனினும் சந்தேக நபர்கள் இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்துள்ளார்.
மேலும் சந்தேக நபர்கள் இருவரும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கோட்டை பொலிஸ் நிலையத்தில் சமுகம் அளித்து கையொப்பம் இட வேண்டுமெனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏமாற்றி கற்பழிக்கப்பட்ட வவுனியா யுவதி: பஸ் சாரதி, நடத்துனர் கைது
Reviewed by Admin
on
July 21, 2013
Rating:

No comments:
Post a Comment