நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனம் விபத்து! இரண்டு பேர் காயம்!
நேற்றிரவு சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது வாகனத்தில் யாழ்- பருத்தித்துறை வீதியில் வல்லைப் பகுதி வழியாக சென்று கொண்டிருக்கையில், எதிர்த்திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவரது வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் காயத்திற்கு உள்ளாகியிருந்தனர். அவர்கள் மந்திகை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் சாதாரண காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவே தெரிவிக்கப்படுகிறது. எனினும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கோ அவருடன் பயணித்தவர்களுக்கோ எதுவித காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலிற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பாக வல்வெட்டித்துறைக்கு சென்று விட்டு திரும்பும்வேளையிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் வாகனம் விபத்து! இரண்டு பேர் காயம்!
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment