அண்மைய செய்திகள்

recent
-

உதயன் செய்தியாளர் டிலீப் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல்

உதயன் அலுவலக செய்தியாளர் குணாளன் டிலீப்அமுதன் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார். வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 தனது பணியினை முடித்துக் கொண்டு இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மகாஜனக் கல்லூரிக்கு அருகில் இவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உதயன் செய்தியாளர் டிலீப் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் Reviewed by Admin on July 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.