தேர்தல் பணிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆசிரிய தொழிற்சங்கம் எச்சரிக்கை
ஆசிரியை ஒருவரை மண்டியிடச் செய்த வடமேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினருக்கு இம்முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.
தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள குறித்த அரசியல்வாதிக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கினால், தேர்தல் கடமைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளப் போவதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வட மேல் மாகாணசபையின் உறுப்பினர் ஆனந்த சரத் குமார என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது எனக் கோரியே இவ்வாறு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அழுத்தம் காரணமாக சரத் குமார கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்;போது வடமேல் மாகாணசபைத் தேர்தலில் சரத் குமார போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆசிரிய தொழிற்சங்கம் எச்சரிக்கை
Reviewed by Admin
on
July 11, 2013
Rating:

No comments:
Post a Comment