மக்களை ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்கிறார் மன்னார் ஆயர்
தமிழ் மக்களையும், இந்தியாவையும் ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்கிறார் மன்னார் ஆயர்
‘வடக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் வேட்பாளராக பல்சார் திறமை கொண்ட ஒருவரையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்த வேண்டும். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நிறுத்தப்படுவார்களேயானால் அது பின்னர் பாரிய பின்னடைவுகளை கொண்டுவரும்’ இவ்வாறு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடியுடன் கூடிய வடக்கு மாகாண தேர்தல் பற்றி கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியென்பது சர்வதேசமளவில் தமிழர் பிரச்சினையை முன்கொண்டு செல்லக்கூடிய பதவியாகவும் அதேவேளை உள்நாட்டில் உருவாகக்கூடிய எல்லாவகையான சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய ஆற்றல் மிகுந்த ஒருவரே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டுமென்பதில் சிவில் அமைப்பினராகிய நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.
மக்களை ஏமாற்ற நினைப்போர் நிச்சயம் ஏமாறுவார்கள் என்கிறார் மன்னார் ஆயர்
Reviewed by Admin
on
July 07, 2013
Rating:

No comments:
Post a Comment