வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உயரம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைபெற்ற மாணவி பா.விஜிந்தினி
இவர் தனது ஆரம்பக்கல்வியையும் விளையாட்டு பயிற்சியையும் மன்/விடத்தல் தீவு தூய யோசவாஸ் மகா வித்தியாலயத்தில் பெற்றார். பின் இடம்பெயர்ந்து தோட்டவெளியில் கல்வி கற்று வருகிறார்.
இவர் ஏற்கனவே 2008,2010,2011,2012 ஆகிய வருடங்களில் முதலாமிடத்தை பெற்று தேசிய விளையாட்டு போட்டியிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த வருடம் தேசிய போட்டியில் 8ஆமிடத்தை பெற்றுக்கொண்டார்.
இவரை இவரது பெற்றோராகிய பாக்கியராசா.நிசாந்தினியவர்களும் இவரது பாடசாலை அதிபர் யோகராசா.உடற்கல்வி ஆசிரியர் அருள்ரூபன்.முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் எமாட் குரூஸ்.பாடசாலை மாணவர்கள்.உறவினர்கள்.கிராம மக்கள் அனைவரும் தொடர்ந்து இவரது முயற்சியில் முன்னேற மனதார வாழ்த்துகின்றனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உயரம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைபெற்ற மாணவி பா.விஜிந்தினி
Reviewed by Admin
on
July 12, 2013
Rating:
No comments:
Post a Comment