அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உயரம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைபெற்ற மாணவி பா.விஜிந்தினி

இம்மாத முற்பகுதியில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 17 வயதிற்கு கீழோருக்கான பிரிவில் மன்/தோட்டவெளி அ.த.க.பாடசாலை மாணவி பாக்கியாசா விஜிந்தினி உயரம் பாய்தலில் முதலாமிடத்தையும் நீளம் பாய்தலில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.


இவர் தனது ஆரம்பக்கல்வியையும் விளையாட்டு பயிற்சியையும்    மன்/விடத்தல் தீவு தூய யோசவாஸ் மகா வித்தியாலயத்தில் பெற்றார். பின் இடம்பெயர்ந்து தோட்டவெளியில் கல்வி கற்று வருகிறார்.

இவர் ஏற்கனவே 2008,2010,2011,2012 ஆகிய வருடங்களில் முதலாமிடத்தை பெற்று தேசிய விளையாட்டு போட்டியிலும் பங்குபற்றியுள்ளார். கடந்த வருடம் தேசிய போட்டியில் 8ஆமிடத்தை பெற்றுக்கொண்டார்.

இவரை இவரது பெற்றோராகிய பாக்கியராசா.நிசாந்தினியவர்களும் இவரது பாடசாலை அதிபர் யோகராசா.உடற்கல்வி ஆசிரியர் அருள்ரூபன்.முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் எமாட் குரூஸ்.பாடசாலை மாணவர்கள்.உறவினர்கள்.கிராம மக்கள் அனைவரும் தொடர்ந்து இவரது முயற்சியில் முன்னேற மனதார வாழ்த்துகின்றனர்.



வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான உயரம் பாய்தல் போட்டியில் முதலாமிடத்தைபெற்ற மாணவி பா.விஜிந்தினி Reviewed by Admin on July 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.