இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
கடந்த 14 தினங்களுக்கு முன் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த 8 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவர்களை நேற்று 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவர்கள் நேற்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில்; ஆஜர் படுத்தகப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதே வேளை கடந்த 6 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by Admin
on
July 12, 2013
Rating:
No comments:
Post a Comment