மக்களினது ஆதரவினையும் பங்களிப்பினையும் எமது அமைப்பு வேண்டி நிற்கின்றது.
தமிழ் மக்களின் தனிப்பெரும் சக்தியாக விளங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பு 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது . அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் மக்களின் வாக்குகளை கவர்வதற்காக ஒரு உத்தியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரினை பாவித்து வந்துள்ளனர் . கூட்டமைப்பினை சிதைப்பதற்கு திரை மறைவில் முயன்றவர்களும் நேரடியாக சதி செய்த ஆனந்தசங்கரி சித்தார்த்தன் போன்றவர்களும் தமது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு தனித்து நின்று செயல்பட முடியாமல் போயிருந்தது . இன்று அவர்கள் கூட்டமைப்புக்குள் புகுந்துள்ளனர் .
தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கட்சியாக இது வரை தொடர்ந்து இயங்குவதற்கு அக்கட்சி உருவாக்கப்பட்ட சூழ்நிலையும் ஒரு காரணமாகும் . இருந்த போதிலும் கூட்டமைப்பினை இன்று வழிநடத்துவதாக கூறிக்கொள்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் உள்ள வசீகரத்தையும் பிரபல்யத்தையும் தமது சுயநலத்துக்காக பயன்படுத்துவதை கண்டு தமிழ் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் .
இவ்வாறான சூழ்நிலையில் பொதுமக்களினதும் தமிழ் தேசிய உணர்வுள்ள இளைஞர்களினதும் புலம்பெயர் சமூகத்தினதும் வேண்டுகோளுக்கு அமைவாக எமது போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கமானது தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஒரு மக்கள் கட்சியாக இசக்தியாக ஜனநாயக ரீதியான அரசியல் கட்சியாக உருவாக்குவதற்கு கடந்த 04 ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சியின் பயனாக ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது . தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் நுழைந்து தமிழர் அரசியலை பலவீனப்படுத்தும் சக்திகளை துரத்தியடித்து தமிழ் மக்களுக்கு சுவீட்சமான எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமாகும்
புலம் பெயர் உறவுகளுக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான நினைவு சின்னம் ஒன்றையும் நினைவு நாள் ஒன்றையும் ஏற்படுத்துதல் . ஏற்கனவே இருந்தவற்றை புனரமைப்பு செய்தல் மீளக்கட்டுதல் இழந்த சொத்துக்களை மீள பெற்றுக்கொடுத்தல் புனர்வாழ்வு அளிக்கபட்ட முன்னாள் போராளிகளுக்கு உதவுவதுடன் சிறைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் தமிழர் பகுதிகளில் தொழில் வளம் அபிவிருத்தியினை மேற்கொள்ளுதல் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தடையினை நீக்குவதற்கு சீறிலங்கா அரசாங்கத்திடம் சட்ட ரீதியாக விண்ணப்பித்தல் இதன் மூலம் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்தியில் சகலரையும் பங்காளிகளாக்குதல் ஆகிய உயரிய நோக்கங்களையும் மேலும் பல சிறப்பான திட்டங்களையும் தாங்கி எமது அமைப்பு இத் தேர்தலில் போட்டியிடுகின்றது .
2014 ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்து அக் கட்சியின் செயல்பாடுகளை பரந்துபட்ட அளவில் விஸ்தரிக்க எண்ணியுள்ளோம் . இதற்காக இவ்வேளையில் சகல தமிழ் மக்களினதும் ஆதரவினையும் பங்களிப்பினையும் எமது அமைப்பு வேண்டி நிற்கின்றது .
நன்றி.
இப்படிக்கு
வி .சகாதேவன்(சகா)
தலைவர் - போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்
செயலாளர் - தமிழ் தேசிய கூட்டமைப்பு .
மக்களினது ஆதரவினையும் பங்களிப்பினையும் எமது அமைப்பு வேண்டி நிற்கின்றது.
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:

No comments:
Post a Comment