அண்மைய செய்திகள்

recent
-

'சயூரா' மீது தாக்குதல்: 6 புலிகளுக்கு எதிராக வழக்கு

இலங்கை கடற்படையின் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயூரா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

 தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு பேரும் நீர்கொழும்புக்கு அண்மையில் வைத்து எஸ்.எல்.என்.எஸ் சயூரா ரோந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 இந்த வழக்கு தொடர்பில் 48 சாட்சியங்களும் 29 தடயப்பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

 எஸ்.எல்.என்.எஸ் சயூரா ரோந்து கப்பல் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் பல தடவைகள் தாக்குதலை மேற்கொண்டனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்த கப்பலானது இலங்கை இராணுவத்திற்கு முக்கியமானதாக இருந்தது.

'சயூரா' மீது தாக்குதல்: 6 புலிகளுக்கு எதிராக வழக்கு Reviewed by Admin on August 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.