'சயூரா' மீது தாக்குதல்: 6 புலிகளுக்கு எதிராக வழக்கு
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு பேரும் நீர்கொழும்புக்கு அண்மையில் வைத்து எஸ்.எல்.என்.எஸ் சயூரா ரோந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் 48 சாட்சியங்களும் 29 தடயப்பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எஸ்.எல்.என்.எஸ் சயூரா ரோந்து கப்பல் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் பல தடவைகள் தாக்குதலை மேற்கொண்டனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்த கப்பலானது இலங்கை இராணுவத்திற்கு முக்கியமானதாக இருந்தது.
'சயூரா' மீது தாக்குதல்: 6 புலிகளுக்கு எதிராக வழக்கு
Reviewed by Admin
on
August 01, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment